ஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் இல்லாமல் எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களும் இனி இந்திய இரு சக்கர சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது. எனவே ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் வித்தியாசம் பற்றி அறிந்து கொள்ளுவோம்.
ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக்
ஏப்ரல் 1, 2018 முதல் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற அனைத்து புதிய மாடல்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
125சிசி க்கு குறைந்த திறன், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு குறைந்த அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
125சிசி அல்லது அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட எஞ்சின், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு அதிகமான இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு எனப்படுகின்ற ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு மற்றும் ஏப்ரல் 1ந் தேதிக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தாது.
ஏபிஎஸ் பிரேக் என்றால் என்ன ?
ஏபிஎஸ் இயக்கம்
ஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.
மேலும் அறிய – ஏபிஎஸ் பிரேக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்