மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோகளுக்கான மாநில அரசு நடத்தும் இலவச பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
chennai rainsசெய்திக் குறிப்பு
பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில் முழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தருவதாக என்னிடம் தெரிவித்துள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களை 12.12.2015 முதல் 21.12.2015 வரை 10 நாட்களுக்கு இந்த நிறுவனங்கள் நடத்தும். இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இந்த பழுது பார்க்கும் கட்டணமில்லா சேவை முகாம் நடத்தப்படும். இந்தச் சேவை முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் ஊரில் எந்த இடம் தெரிந்து கொள்ள ; நடைபெறும் இடங்கள் விபரம்
மழை வெள்ளம் காரணமாக பழுதடைந்த இரு சக்கர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள்/ ஆட்டோ ஒட்டுநர்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் வாகனங்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி சீர் செய்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.