ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது இருசக்கர வாகன ஆலையை பெங்களூர் அருகில் திறந்துள்ளது.
பெங்களூர் நரசப்பூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலைக்கான முதலீடு ரூ.1350 கோடியாகும். சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் வருடத்திற்க்கு 12 லட்சம் பைக்கள் உற்பத்தி செய்ய முடியும். அடுத்த மாதம் முதல் உற்பத்தியை இந்த ஆலையில் தொடங்க உள்ளது.