Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎஸ் 3 தடை : விற்பனை செய்யப்படாமல் 1.20 லட்சம் வாகனங்கள்

by MR.Durai
12 April 2017, 3:22 pm
in Auto Industry
0
ShareTweetSend

பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறைய தொடர்ந்து பிஎஸ் 3  வாகனங்களை விற்பனை செய்ய ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் 5,000 கோடி மதிப்பிலான 1.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது.

 பிஎஸ் 3  தடை

  • மார்ச் 31 வரை மட்டுமே பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
  • நாடு முழுவதும் கையிருப்பில் 1.20 லட்சம் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.
  • சலுகைகளால் ரூபாய் 1200 கோடி வரை வாகன நிறுவனங்களை இழப்பீட்டை சந்தித்துள்ளது.

பைக்குகள், கார்கள் , மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை மார்ச் 31க்கு பிறகு பி.எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் அதிரடியாக தடைவிதித்தது. ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 தர மாசு விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் மதிப்பு ரூபாய் 20,000 கோடியாகும்.

மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய இருதினங்களில் வாகன தயாரிப்பாளர்கள் அதிரடியாக வாரி வழங்கிய சலுகைகளை தொடர்ந்து 90 சதவீத வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நாடுமுழுவதும் தற்பொழுது 1.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அதிரடியாக வழங்கப்பட்ட விலை குறிப்பினால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய் 1200 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளது.

அதன் விபரம் 78,000 இருசக்கர வாகனங்கள்,  19,000 முன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் எண்ணிக்கை 44,000 ஆக உள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதிக அளவிலான பாதிப்பை வர்த்தக ரீதியான வாகன தயாரிப்பாளர்களே பெற்றுள்ளனர். விற்பனை செய்யப்படாமல் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூபாய் 5,000 கோடியாகும்.

இந்த வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதால் இலங்கை, நேபால் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan